செஞ்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்

        லங்கை இறுதிப்போரின்போது நிகழ்ந்த இனப்படுகொலையை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் ஆட்டோ ஓட்டுநர்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
      ராஜா தேசிங்கு, அறிஞர் அண்ணா உள்ளிட்ட ஆட்டோ சங்கங்களை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், தனி ஈழம் அமைய பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.