விழுப்புரத்தில் கடும் பனி பொழிவு: வாகன ஓட்டிகள் அவதி

         விழுப்புரம் மாவட்டத்தில் கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளகினர்.
விழுப்புரம் நகரில் இன்று காலையில் கடும் பனி மூட்டம் நிலவிது. இதனால் முகப்பு விளக்குகளை எரியவிட்டப்படியே வாகனங்கள் ஊர்ந்து சென்றன. பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
காலை 7மணிக்கு பின்பும் பனி பொழிவு குறையாததால், சாலைகளில் எதிர்வரும் வாகனங்கள் தெரியாத நிலை இருந்தது. வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வேலைகளுக்கு செல்பவர்கள், நடைபயற்சி மேற்கொள்பவர்கள் என அனைத்து தரப்பினரும் சிரமத்திற்குள்ளாகினர். விழுப்புரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதே நிலையே நீடித்தது.

-நாகை மகாகிருஷ்ணன்