விழுப்புரத்தில் மணல் கடத்திய வண்டிகள் பறிமுதல்


      விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் எடுத்துச் சென்ற 8 மாட்டு வண்டிகள் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.பிடாகம் பகுதியில் தென் பெண்ணை ஆற்றில் அனுமதியின்றி மணல் கடத்தப்படுவதாக விழுப்புரம் நகர காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத்தொடர்ந்து போலீசார் நடத்திய சோதனையில் காமராஜர் சாலையில் சென்று கொண்டிருந்த 8 மாட்டு வண்டிகள் மணல் கடத்தலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார், மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
                                 -இணைய செய்தியாளர் - s.குருஜி